|
துபாய் : துபாய் ஈமான் அமைப்பு பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சியினை ஹிஜிரி 1431, ஷ அபான் பிறை 15, 26 ஜுலை 2010 திங்கள் மாலை லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடத்த இருக்கிறது.
முதல் அமர்வாக மஃரிப் தொழுகைக்குப் பின்னர் மூன்று முறை யாசின் ஓதி துஆ செய்யப்படும். இரண்டாம் அமர்வாக இஷா தொழுகைக்குப் பின்னர் லூத்தா ஜாமி ஆ மஸ்ஜித் இமாம் மௌலவி எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கீ, மௌலவி எஸ்.ஏ. இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.
பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
|